shadow

சென்னை ஐஐடி மாணவரை நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்!

மாட்டுக்கறி விவகாரத்தில் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான ஐஐடி மாணவர் சூரஜை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ள சூரஜ் என்பவர், சக மாணவர்களுடன் இணைந்து, மாட்டுக்கறி விருந்து நடத்தியுள்ளார். இதற்கு, மற்றொரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்படவே, மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர், தற்போது வலது கண்ணில் பலத்த காயமடைந்து, சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர் சூரஜை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். சம்பவத்தின் முழு விவரம் மற்றும் சிகிச்சை விவரங்கள் பற்றி கேட்டறிந்த அவர், சூரஜ் விரைவில் நலம்பெற்று திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

இதுபற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘’மாணவர் சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து ஐஐடி நிர்வாகமும், சென்னை மாநகர காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,’’ என்றார்

Leave a Reply