உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக மனு

உள்ளாட்சி தேர்தலை நடத்த திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே விருப்பம் இல்லாமல் இருக்கும் நிலையில், பெயரளவிற்கு உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை அதிமுக அரசு வெளியிட, அதனை எதிர்த்து தற்போது திமுக மனு தாக்கல் செய்திருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது

ஏற்கனவே புதிய மாவட்டங்களுக்கான தொகுதி வரையறை பணி முடியும் வரை தேர்தல் நடத்தக்கூடாது என திமுக மனு கொடுத்துள்ள நிலையில் இந்த புதிய மனுவால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

Leave a Reply