என்பிஆர்-க்கு எதிராக தீர்மானம்: சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

சிஐஏ போராட்டம் தற்போது தான் ஓரளவு ஓய்ந்திருக்கும் நிலையில் இன்று சட்டமன்றத்தில் திமுக என்.பி.ஆர் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் என்பிஆர் குறித்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதற்கு எதிராக தீர்மானம் தீர்மானமொன்றை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்தார்

ஆனால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவதால் என்.பி.ஆர் விஷயத்தில் எந்தவித மாற்றமும் நிகழப் போவதில்லை என்றும் அதிமுக தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply