shadow

சபாநாயகரை கண்டித்து திமுக உண்ணாவிரதம். திருச்சியில் ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை அதிமுக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதை கண்டித்து திமுகவினர் இன்று தமிழக முழுவதும் மாவட்ட தலைநகர்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார்.

திருச்சி தென்னூர் உழவர்சந்தையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினுடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று மாலை வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதம் சென்னை காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான திமுக.,வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று திமுக தாக்கல் செய்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply