shadow

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தோல்வி அடையும். நெடுமாறன்

pazha.nedumaranகடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் இழைத்த துரோகம்தான். எனவே மீண்டும் இந்த கூட்டணி அதே காரணத்திற்காக தோல்வி அடையும் என தமிழர் தேசிய இயக்கத்தலைவர் நெடுமாறன் கூறியுள்ளார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் செய்து வரும் போராட்டக்காரர்களை நேரில் சந்திக்க வந்த நெடுமாறன் அவர்களுடைய போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லி மாணவர் கன்னையாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் நீதிபதி, வக்கீல்கள் முன்னிலையில் அவரை பாஜகவினர் தாக்கியிருப்பது பாஜகவின் பாசிச முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்ட தமிழக அரசு போராட்டம் நடத்த வேண்டும்

பவானி ஆற்றின் 30 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாவதை தடுக்கும் திட்டம்தான் அத்திக்கடவு-அவினாசி திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் கோவை, திருப்பூர், ஈரோடு மக்கள் பயனடைவர். காமராஜர் கொண்டு வந்த இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்

இலங்கையில் இறுதிப்போர் நடந்தபோது ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுக-காங்கிரஸ் கட்சிகள். இந்த கூட்டணி இதே காரணத்திற்காக மீண்டும் தோல்வி அடையும்

இவ்வாறு நெடுமாறன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Chennai Today News: DMK-Congress alliance failed once again said Nedumaran

Leave a Reply