நீண்ட நாட்களுக்கு பின்னர் ‘அண்ணா’ என்று பேசினார் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை நல்லமுறையில் தேறி வருவதாகவும், விரைவில் அவர் பேசுவார் என்றும் மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவர் முன் ‘கருணாநிதி’ , ‘அண்ணா’ என இரண்டு வார்த்தைகளை பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து திமுக பிரமுகர் துரைமுருகன் கூறியபோது, ”கருணாநிதியிடம் உங்கள் பெயர் என்ன என்று மருத்துவர் கேட்டதற்கு கருணாநிதி என கூறினார்’ என்றும் அதேபோல் உங்களுக்கு பிடித்தத் தலைவர் யார் என்று மருத்துவர் கேட்க, ‘அண்ணா’ என்று கருணாநிதி கூறியதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.
துரைமுருகனின் இந்த தகவல் திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவர் மீண்டும் தனது கம்பீர குரலில் தொண்டர்கள் முன் பேசும் நாள் வெகுதொலையில் இல்லை என திமுக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.