shadow

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

ரிஷிவந்தியம் தொகுதி மணலூர்பேட்டையில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார்

விஜய பிரபாகரனுக்கு அந்த பகுதி மக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் இனிமேல் தனித்து போட்டி தான் என தெரிவித்தார்.