காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கூறியதாவது: ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடித்தால், அவர்களுக்குள் சண்டை வரும் என்பார்கள். 100 டிகிரி செல்சியஸ் என்ற மலையாள படத்தில் அனன்யா, பாமா, சுவேதா ஆகியோருடன் நானும் நடிக்கிறேன். எங்களுக்குள் மோதல் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஷூட்டிங்கில் முதல் நாள் எங்களுக்குள் சரியான அறிமுகம் இல்லாததால் இறுக்கமான சூழல் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல நாங்கள் 4 பேரும் ஒன்று கூடிவிட்டோம். அதன்பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டைதான். இரவு நேரத்தில் ஷூட்டிங் நடந்தால் ஓய்வு நேரத்தில் 4 பேரும் ஒன்றாக சுற்ற கிளம்பி விடுவோம். எங்களில் மூத்தவர் சுவேதா. எதையும் நேர்மையாக அணுக கூடியவர். எதற்கும் இரட்டை வேடம் போட மாட்டார். அவரை அக்கா என்றுதான் அழைப்போம்.

4 ஹீரோயின்கள் நடித்ததில் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. ஆனால், இயக்குனர் ராகேஷ்தான் திணறிவிட்டார். எங்களை கட்டுப்படுத்தி காட்சி படமாக்குவதற்குள் அவர் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். இன்னொரு முறை பெண்களை மையமாக வைத்து இயக்குவாரா என்பது சந்தேகம்தான்.

Leave a Reply