shadow

சிவகார்த்திகேயன் தயாரித்த ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலனுக்கு இன்று திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலனுக்கு தங்க செயினை பரிசளித்தார். சிவகார்த்திகேயனின் திடீர் விசிட் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தை அடுத்து இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.