கோவை போலீஸ் கமிஷனரிடம் இன்று காலை இயக்குனர் ஹரி திடுக்கிடும் புகார் ஒன்றை கொடுத்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி தற்போது ‘பூஜை’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. விஷால், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் ஹரி இன்று காலை கோவை போலீஸ் கமிஷனரை சந்தித்து தன்னுடைய பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது என்றும் அதில் பொய்யான சில விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அதை உடனே தடுத்து நிறுத்துமாறும் அவர் கோவை போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.
இயக்குனர் ஹரியுடன் படத்தின் நாயகி ஸ்ருதிஹாசனும் கோவை போலீஸ் கமிஷனரை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.