shadow

சிம்புவின் ‘AAA’ ஏன் இரண்டு பாகம். இயக்குனர் ஆதிக் விளக்கம்

சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியபோது, இந்த படத்தில் சிம்புவின் கேரக்டர்களான மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய இரண்டு கேரக்டர்களின் காட்சிகளே 2 மணி நேரம் 40 நிமிடங்கள் உள்ளது. எவ்வளவு முயற்சி செய்தும் காட்சிகளை குறைக்க முடியவில்லை. எனவேதான் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த படத்தில் சிம்பு நான்காவதாகவும் ஒரு கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுவது குறித்து பதில் கூற ஆதிக் மறுத்துவிட்டார்.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, நீது சந்திரா, சனாகான், மகத், விடிவி கணேஷ், கோவை சரளா, ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்

Leave a Reply