ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர்
சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தினகரன், பணப்பட்டுவாடா செய்து தான் வெற்றி பெற்றதாக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் புகார் கூறியுள்ளது தெரிந்ததே. கடைசி இரண்டு நாட்களில் ரூ.20 டோக்கன் கொடுத்து தேர்தலுக்கு பின் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று கூறியதாகவும் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தினகரனும் அவரது ஆதரவாளர்களும் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்கு ரூ.20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான் என்று தினகரன் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜசேகரன் முசிறியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். இவரது பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிட சொன்னது தினகரன் தான் என்றும் ராஜசேகரன் கூறியுள்ளதால் அவரது அணியினர்களே அவர் மீது காட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.