சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்து வருத்தம் தெரிவித்தாரா அமைச்சர்?

தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் நேற்று 14 வயது ஜேசன் என்ற அரசு பள்ளியில் படித்து வரும் சிறுவர் ஒருவரை காலில் இருந்த செருப்பை கழட்டுமாறு கூறியதாக வெளிவந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த விவகாரம் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் மட்டுமன்றி டெல்லி வரை சென்று விட்டதாகவும் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக விரும்பாத அமைச்சர் சீனிவாசன் அவர்கள் தற்போது சிறுவனின் குடும்பத்தினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குடும்பத்தினரிடம் அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply