வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசம்: வாபஸ் பெறப்படுகிறதா புகார்?

காலணியை அகற்ற சொன்ன சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்ததாகவும், இதனையடுத்து அமைச்சர் மீது அளித்த புகார் இன்று மாலைக்குள் வாபஸ் பெறப்படும் என மாணவனின் தாய் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் நேற்று 14 வயது சிறுவர் ஒருவரை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதாக வெளிவந்த வீடியோ மற்றும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் அமைச்சர் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டது

இந்த நிலையில் இன்று சிறுவனின் குடும்பத்தார் ஊட்டி விருந்தினர் மாளிகைக்கு அழைக்கப்பட்டதாகவும் அவர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி மாணவனின் பெற்றோரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்ததை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது

Leave a Reply