ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்-தினமணி ஆசிரியர் திடீர் சந்திப்பு
சமீபத்தில் ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கருத்தரங்கம் ஒன்றில் கூறியதாக கவிஞர் வைரமுத்து மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கருத்தரங்கை தினமணி நாளிதழ் ஏற்பாடு செய்ததால் தினமணி நாளிதழ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருடன் தினமணி பத்திரிகை ஆசிரியர் வைத்தியநாதன் இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.