shadow

எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும்: தினகரன் திட்டவட்டம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு செல்லாது என்றும் எங்கள் கட்சியின் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தனி கூட்டணி அமைத்து சந்திப்போம். இதில் எங்களுடன் பல கட்சிகள் இணைந்து செயல்படும்.

நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சட்டசபை தேர்தலில் எங்களுக்கு 200 இடங்கள் கிடைக்கும். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காட்டுவோம் என்று தினகரன் கூறியுள்ளார்.

Leave a Reply