அதிமுக தலைமைக்கழகம் யாருக்கு? தினகரன் – ஈபிஎஸ் போட்டா போட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் என இரண்டாக பிரிந்த நிலையில் தற்போது சசிகலா அணியில் இருந்து சசிகலா, தினகரன் உள்பட அனைவரையும் ஒதுக்கி வைக்க சீனியர் அமைச்சர்கள் முடிவு செய்துவிட்டனர்.
இந்த நிலையில் அதிமுக தலைமைக்கழகத்தில் இன்று மாலை 3 மணிக்கு அவசர கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தினகரன் அறிவித்துள்ளார்
ஆனால் தினகரன் கூறியதுபோல் அதிமுக கூட்டத்தை தலைமைகழகத்தில் நடத்த முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக தலைமைக்கழகம் எந்த அணிக்கு சொந்தம் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இன்று மாலை தினகரன் தலைமைகழகத்தில் கூட்டத்தை நடத்த முயன்றால் முதல்வர் ஈபிஎஸ் அணியினர் அதனை தடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.