shadow

டெல்லி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் அணி மனு. அடுத்த அறுவை சிகிச்சையா?

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியா? அல்லது தினகரன் அணியா? என்ற பலப்பரிட்சை நடந்து வருகிறது. இரு அணிகளும் கட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் அணியின் நிர்வாகிகள் இன்று மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவில் அதிமுகவின் சின்னம், கட்சியின் பெயர் விவகாரத்தில் தங்களை கேட்காமல் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க மூடாது என்று குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தினகரனின் அடுத்த அறுவை சிகிச்சையாக பார்க்கப்படுகிறது.

இதனால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்திருந்த போதிலும் கட்சியின் சின்னமான இரட்டை இலையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Leave a Reply