அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மும்பையில் உள்ள தமிழர்களை தாறுமாறாக தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியான தாராவியில் ஏராளமான தமிழ் பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்

இந்த பகுதியில் உள்ள தமிழர்களின் 175 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மும்பை தாராவி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை அந்த பகுதியில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது

ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் தமிழர்கள் வாழும் பகுதியான தாராவியில் மட்டும் 275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply