தனுஷின் பெற்றோர் யார்? உறுதி செய்தது மதுரை ஐகோர்ட்
பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும் சினிமா ஆசையால் தங்களை விட்டு சிறுவயதில் தனுஷ் பிரிந்து சென்னை சென்றுவிட்டதாகவும், எனவே தங்களுடன் தனுஷை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி என்ற தம்பதியினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சமீபத்தில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. தனுஷை தங்கள் மகன் என்று கூறிய மதுரை தம்பதியினர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் தனுஷ், கஸ்தூரி ராஜாவின் மகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு தனுஷுக்கு ஏதிராக தான் தீர்ப்பு வரும் என்று கூறப்பட்ட நிலையில் , தற்போது தனுஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.