நடன இயக்குனர் காயத்ரி ரகுராமுடன் இணைந்த தனுஷ்
கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவராக தனுஷ் தற்போது ‘வடசென்னை’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ‘பவர் பாண்டி’ என்ற படத்தை அவர் இயக்கியும் வருகிறார்.
இந்த பிசியிலும் அவர் மற்றவர்களின் படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். சமீபத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்காக ஒரு பாடலை பாடிய தனுஷ், தற்போது பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகையான காயத்ரி ரகுமாமின் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை பாடிய தனுஷூக்கு காயத்ரி ரகுமார் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த பாடல் தனுஷ் பாடிய பிற பாடல்களை போல ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Leave a Reply
You must be logged in to post a comment.