புதிய தகவல்
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரும் திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்ப வேண்டுமென்று தொடக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்து பள்ளி திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பத்தாம் வகுப்புக்கு ஜூன் 1ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனேகமாக ஜூலை மாதம் பள்ளிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.