shadow

டெல்லியில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் வாரம் முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதனால் 3வது அலையில் முழு ஊரடங்கை அமல்படுத்திய முதல் மாநிலம் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனையடுத்து டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது..

x