shadow
டெல்லி vs ராஜஸ்தான் போட்டி: மழை குறுக்கிட்டதால் ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி, ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்யுமாறு கூறியது.
முதலில் பேட்டிங்ட் செய்த ராஜஸ்தான் 17.5 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை நின்றவுடன் டெல்லி அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்க இலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் ராஜஸ்தான் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 6 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த டெல்லி அணி வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Leave a Reply