shadow

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதை அடுத்து காலவரையின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டு உள்ளது

மேலும் அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தனியார் ஊழியர்களும் வீட்டில் இருந்துதான் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசுபாட்டை தடுக்க ஊரடங்கு உத்தரவையும் அமல்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.