shadow

டெல்லி: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி முதல்வருடன் துணை நிலை ஆளுனர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து துணை நிலை ஆளுனரிடம் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி முதல்வர் அவருடைய அலுவலகம் சென்றார். ஆனால் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து கவர்னர் அலுவலகத்திலேயே கடந்த 7 நாட்களாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயினுக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக லோக் நாயக் ஜெய் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply