shadow

delhiடெல்லியில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்ற ஒரு கருத்துக்கணிப்பை கடந்த மாதம் தனியார் நிறுவனமான ஆர்.டி.ஐ. (Research and Development Initiative) என்ற நிறுவனம் நடத்தியது. இந்த  கருத்துக் கணிப்புகளின் படி பாஜக 41 முதல் 45 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை பெறும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 21-25 இடங்களைக் கைப்பற்றலாம் என்றும் காங்கிரஸ் 0-4 இடங்களைக் கைப்பற்றலாம் என்றும் கூறுகிறது.

இதேபோல் சமீபத்தில் ஐந்து நிறுவனங்கள் தேர்தல் குறித்து எடுத்த கருத்துக்கணிப்புகளில் நான்கு கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகவும், ஒரே ஒரு கருத்துக்கணிப்பு மட்டும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும் உள்ளது.

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனங்களான இந்தியா டிவி, தி வீக், டெட்டா மைனாரியா மற்றும், ஜீ தலீன் ரிசர்ச் பவுண்டேசன் ஆகிய நான்கு நிறுவனங்களும் பாரதிய ஜனதா 36 இடங்களை கைப்பற்றும் என்றும், நியூஸ் நேசன் என்ற நிறுவனம் ஆம் ஆத்மி 30 முதல் 34 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளன.

Leave a Reply