shadow

crorepatiபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கடந்த 14 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் குரோர்பதி என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது இந்த டிவி ஷோ புதுப்பொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது. பரிசுத்தொகையும் ஒரு கோடி ரூபாயில் இருந்து ஏழு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் டெல்லியைச் சேர்ந்த அச்சின் (28), சர்தாக் நருலா (23) என்ற சகோதரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு அமிதாப்பச்சன் பல்வேறு துறைகளில் இருந்து 14 கேள்விகள் கேட்டார். நான்கு லைப்லைன் உதவியுடன் இந்த அபூர்வ சகோதரர்கள் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி முதன்முதலாக அதிகபட்ச பரிசுத் தொகையான ரூ.7 கோடியை வென்று சாதனை படைத்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகை இந்தியாவில் வேறு எந்த சேனல் கேம் ஷோவிலும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.7 கோடி பரிசு வென்ற டெல்லி சகோதரர்களை அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே இவர்கள் போட்டியை அணுகிய விதம் மற்றவர் களுக்கு எடுத்துக் காட்டாக திகழக்கூடியது” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply