shadow

சென்னை போலீஸ் கமிஷனரிடம் தினகரன் மீது தீபா திடீர்ப் புகார்!

கடந்த ஞாயிறு அன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, திடீரென போயஸ் கார்டன் சென்றதாகவும், அங்கிருந்த தினகரன் ஆதரவாளர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்பட்டது. மேலும் தன்னுடைய சகோதரன் தீபக், சசிகலாவுடன் கூட்டுசதி செய்து அத்தை ஜெயலலிதாவை கொன்றதாகவும் தீபா குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் இன்று திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா டி.டி.வி.தினகரன் தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள் தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களைக் கைது செய்யவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

சற்றுமுன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீபாவின் வழக்கறிஞர்கள் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் போயஸ் கார்டனில் தீபா மீது தாக்குதல் நடத்திய டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் தினகரன் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தீபாவை தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுமீது போலீசார் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து ஊடகங்களும் தமிழக மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply