கணவர் பெயர் இல்லை: தீபா வேட்புமனு நிராகரிப்பா?
சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று முதல் ஆளாக அறிவித்த தீபா, கடைசி நேரத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேண்டா வெறுப்பாக வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும், அவருக்கு மாற்று வேட்பாளர் கூட மனுதாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடந்து வருகின்றது. அதில் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தீபா மனுதாக்கல் செய்த போது அவரது கணவர் பேட்ரிக் மாதவன் வங்கி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் வேட்புமனுவில் கணவரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கணவர் பெயர் மற்றும் அவருடைய வங்கிக்கணக்கு விபரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று தெரிந்து வேண்டுமென்றே தீபா வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் பரவிவருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.