டிசம்பர் 10ஆம் தேதி விடுமுறை: திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினத்தை இந்துக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருவது தெரிந்ததே

அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி பெரிய கார்த்திகை என்று கூறப்படும் கார்த்திகை திருவிழா வரவுள்ளது

இந்த நிலையில் கார்த்திகை தீபத்தையொட்டி டிசம்பர் 10ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

டிசம்பர் 10ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யம் வகையில் டிசம்பர் 21ஆம் வேலை நாள் என்றும் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அவர்கள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply