அதிர்ச்சி தகவல்
மும்பை வெடிகுண்டு சம்பவத்துக்கு மூளையாக இருந்த தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தாவூத் இப்ராஹிம் மனைவிக்கும் கொரனோ தொற்று தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தாவூத் இப்ராஹிம் இப்ராஹிம் வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இந்த தகவலை மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.