பாலியல் சம்பவங்கள் நடிகைகளின் ஒப்புதலில்தான் நடைபெறுகிறது: சரோஜ்கான்
கடந்த சில நாட்களாக ஸ்ரீரெட்டி உள்பட பல நடிகைகள் வாய்ப்புக்காக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது குறித்த அதிரடி தகவல்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகைகளின் ஒப்புதல் இல்லாமல் சினிமாவுலகில் எந்த பாலியல் சம்பவங்களும் நடைபெறுவதில்லை என்று பாலிவுட் நடன இயக்குனர் மற்றும் நடிகை சரோஜ் கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்பது சினிமாவில் மட்டுமில்லை, அரசுத் துறைகளிலும் இருக்கிறது. மற்ற துறைகளை பொருத்தவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கைவிட்டு விடுவார்கள் என்றும், ஆனால் சினிமாவில் வாய்ப்புக்காக இணங்கிச் சென்றால், வேலைவாய்ப்பாவது கிடைக்குமே… பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று சரோஜ் கான் கூறியுள்ளார்
சரோஜ்கானின் இந்த கருத்துக்கு பலர் ஆதரவும், ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.