சசிகலா தரப்பில் மறு சீராய்வு மனு: வெளியே வர வாய்ப்பு உண்டா?
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று அவரது தரப்பில் இருந்து மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
ஆனாலும் இந்த வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் பல விதங்களில் ஆய்வு செய்துதான் இறுதி தீர்ப்பை கொடுத்துள்ளது. எனவே இந்த மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒருவேளை சசிகலாவுக்கு அதிர்ஷ்டம் இருந்து மறுசீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் வெளியே வர வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அது நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.