shadow

கடந்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,513 ரவுடிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், கூலிப்படையினர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் இல்லை என கூறியுள்ள டிஜிபி சைலேந்திரபாபு தொடர் குற்றச்செயலில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.