shadow

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.

இதனை அடுத்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழக கடற்கரையோரம் நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வர உள்ள நிலையில், எண்ணூர் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது