shadow

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாக வர்ணணையாளர்கள் தெரிவித்துள்ளனர்

நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது

இதனை அடுத்து அந்த அணி தற்போது 6 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது

இன்னும் 5 போட்டிகள் சென்னை அணிக்கு உள்ள நிலையில் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் முதல் நான்கு அணிகளீல் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தோனியின் தலைமையில் புத்துணர்ச்சி பெற்றுள்ள சென்னை அணி தொடர் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்