shadow

கள்ளக்குறிச்சி பள்ளிகள் நேரடி வகுப்பு தொடங்க அனுமதி: நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்த பள்ளியில் கலவரம் காரணமாக மூடப்பட்ட நிலையில் பள்ளி திறக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இதனையடுத்து ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

எல்.கே.ஜி முதல் நான்காம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.