shadow

பயமே இல்லையா? பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்

பிரபல இயக்குனர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக தமிழக மத்திய, மாநில அரசுகள் குறித்து கடுமையாக விமர்சித்துவரும் நிலையில் இரண்டு வழக்குகளில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் நீதிமன்றம் அளித்துள்ளது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளை அவர் சரிவர பின்பற்றவில்லை என தெரிகிறது. இதுகுறித்து ஏற்கனவே நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாரதிராஜா. மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதனைதொடர்ந்து, நிபந்தனைகளை நிறைவேற்றாத பாரதிராஜா மீது காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என மிகவும் காட்டமாக நீதிபதி கூறினர்.

Leave a Reply