சென்னை ஏடிஎம் சோகம்
ஏடிஎம்களில் அவசர தேவைக்காக பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுப்பது மட்டுமின்றி கொரோனா வைரஸையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் பராமரிப்பு இன்றி இருப்பதால் அதன் மூலம் கொரோனா வைரஸ் வாடிக்கையாளர்களுக்கு பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது வங்கியுடன் இணைந்து இருக்கும்
வங்கியுடன் இருக்கும் ஏடிஎம்கள் தவிர தனியாக இருக்கும் ஏடிஎம்கள் பராமரிக்கப்படவில்லை என்றும் அங்கு சானிடைசர் வைப்பதில்லை என்றும் சென்னை மாநகராட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் இவ்வகை ஏடிஎம்களை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு கொரோனாவைரஸ் தொற்று அதிகம் பரவி வருவதாகவும் இதனை அடுத்து அனைத்து ஏடிஎம்களிலும் சானிடைசர் வைக்க வேண்டும் என்றும் கிருமி நாசினி தெளித்து முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.