கொரோனா வைரஸ் எதிரொலி: 144 தடை உத்தரவு போட்ட அரசு

கொரோனா வைரஸ் எதிரொலியாக ஒரே இடத்தில் பலர் கூடி இருக்க கூடாது என்பதை வலியுறுத்தி 144 தடை உத்தரவு பிறப்பித்து ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது

இதனை அடுத்து நான்கு பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடி இருக்க கூடாது என்ற சட்டம் இன்று முதல் இது அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தான் மிக வேகமாக பரவுகிறது என்பதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேபோல் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இன்னும் ஒரு சில மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply