வெள்வால்களுக்கும் பரவியதால் கடும் அதிர்ச்சி

இதுவரை மனிதர்களை மட்டுமே தொற்றி வந்த கொரோனா வைரஸ் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கும் பரவியதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்தியா உள்பட எந்த நாட்டிலும் எந்த விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற செய்தி சற்று நிம்மதியை தந்தது.

ஆனால் சற்றுமுன்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்வால் போன்ற பறவைகளுக்கு கொரோனா பரவினால் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவால் என்பதால் உலகில் உள்ள மனித இனமே அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இனிமேல் தான் கொரோனா ஆட்டமே ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply