கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாறும் ஓமந்தூரார் மருத்துவமனை

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு என தனியாக ஓமந்தூரார் மருத்துவமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்

350 பெட்கள் கொண்ட தனி வார்டுகள், தனிமைப்படுத்தப்படும் வசதி மற்றும் மருந்து உபகரண பொருட்கள் அனைத்தும் அடங்கிய இந்த கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையை நேரில் பார்த்து திருப்தி அடைவதாகவும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் இனிமேல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஒடிசாவில் கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்திலும் அதேபோன்ற ஒரு சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் மிகுந்த திருப்தியை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா , ஓமந்தூர், மருத்துவமனை, அமைச்சர் விஜயபாஸ்கர்,

Leave a Reply