மைசூர் பாகு, பர்பி, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகள் தூளாக மிஞ்சிவிட்டதா? கவலையை விடுங்கள். இவற்றுக்காகவே போளி செய்து இனிப்புத் துகள்களைப் பூரணத்துடன் கலந்து உபயோகிக்கலாம்.

முறுக்கு வகைகளை ஆரம்பத்திலேயே தண்ணீ­ர் கலந்து பிசையாமல் வெண்ணெய், உப்பு மற்றும் எல்லாச் சாமான்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும் இந்த உதிரான மாவை ருசி பார்த்துப் பிறகு நீர் கலந்து பிசைந்தால் அதிகம் ஊறாமலும் அளவான உப்பு, கார ருசியுடனும் இருக்கும்.

பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய் வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

Leave a Reply