நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி வழக்குத் தொடர்வது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைக்கப்பட்டால் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூறினார்
காங்கிரஸ் கட்சியினரின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்ற வளாகத்தில் நின்றிருந்தனர். அப்போது செய்தியாளர் ஒருவரிடம் பேசிய சோனியா காந்தி, “மக்களவையில், காங்கிரஸ் கட்சி மட்டுமே ஒரே மிகப்பெரிய கட்சியாகும். எங்களுக்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் கட்சிகள் உள்ளன. நாங்கள் நிச்சயம் எதிர்க்கட்சி அந்தந்தை நிச்சயம் பெறுவோம். எங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்காமல் துரோகம் செய்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை செய்வோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.