வெங்கையா நாயுடு விருந்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவா?
ராஜ்யசபாவிற்கு புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் ராஜ்யசபாவின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹரிவன்ஷ் ஆகியோர்களுக்கு ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு இன்று காலை விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த விருந்தில் அனைத்து ராஜ்யசபா உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.