shadow

satish sivalingamகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் ஒருவர் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

20வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்காவது நாளில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தின் வேலூரை  சேர்ந்த சதீஸ்குமார் சிவலிங்கம் என்பவர் தங்கம் வென்று சாதனை படைத்தார்.  இதே பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு 2வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

22 வயதான சதீஸ்குமார் சிவலிங்கம்,  கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கப்பதக்கம் பெற்ற சதீஸ்குமார் சிவலிங்கத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக மகளில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ் வெணகலப்பதக்கம் பெற்றார். இந்தியா இதுவரை ஆறு தங்கமும், ஒன்பது வெள்ளியும், ஏழு வெணகலப்பதக்கங்களும் பெற்றுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1k34e79″ standard=”//www.youtube.com/v/-j9aNgRn16g?fs=1″ vars=”ytid=-j9aNgRn16g&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5808″ /]

Leave a Reply