shadow

வெளிநாடு பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும், வெளிநாடு பயணத்தின் போது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ₨6,100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் -என்றும், தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டு தெரிவித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

4 நாள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். தமிழகம் திரும்பிய முதல்வரை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்