shadow

உயிரிழந்த கோவை மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: முதல்வர் உத்தரவு

கோவையில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது எதிர்பாராமல் மரணம் அடைந்த மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து கொண்டிருந்த லோகேஸ்வரி என்ற 19 வயது மாணவி நேற்று தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது எதிர்பாராமல் மரணம் அடைந்தார். இதனையடுத்து பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் முதல்வர் நிதியுதவி செய்துள்ளார். இதுகுறித்த உத்தரவு ஒன்றில் அவர் சற்றுமுன் கையெழுத்திட்டார். மேலும் மாணவியின் குடும்பத்தினர்களுக்கு முதல்வர் தனது இரங்கலையும் தெரிவித்து கொண்டார்.

Leave a Reply