shadow

ஆல்ப்ஸ் மலையில் இருந்து தவறி விழுந்து பலியான 5 ஜெர்மனி வீரர்கள்

ஆஸ்திரியா நாட்டில் ஷில்லெட்ரல் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜெர்மனியை மலையேறும் வீரர் ஒருவர் திடீரென எதிர்பாராதவிதமாக கயிற்றில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

அவரை தொடர்ந்து அவருடன் அதே கயிற்றில் மலையேறிய மற்ற 4 வீரர்களும் 650 அடி பள்ளத்தில் தவறி விழுந்தனர். இதனால் 5 வீரர்களும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் மேலும் ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்கல் அனைவரும் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply